பேராவூரணி அருகே அரசுப்பேருந்து முன்சக்கர டயர் வெடித்து  பேருந்துசேதம் காயமின்றி தப்பிய பயணிகள்

Spread the love

பேராவூரணி அருகே அரசுப்பேருந்து முன்சக்கர டயர் வெடித்து பேருந்து சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர். பேராவூரணியிலிருந்து வடகாடுவரை செல்லும் 2ம் நம்பர் பேருந்தின் முன்சக்கர டயர் எதிர்பாரதவிதமாக திடீரென ஆவணம் கைகாட்டி அருகே வெடித்தது, டயர் வெடித்த அதிர்வில் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்து ஒட்டுநர் இருக்கையும், பயணிகள் அமரும் இருக்கையும் பிளவுபட்டு இரண்டாகும் நிலை ஏற்ப்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பேராவூரணி அரசு போக்குவரத்து கழக  பணிமனை தமிழகத்திலேயே  முதல் முறையாக  நகரப்பேருந்துக்கென கிராமப்பகுதியில்   தொடங்கப்பட்ட பணிமனை. தொடங்கப்பட்டு 40 ஆண்டுகளை கடந்த நிலையிலும் பெரும்பாலான பேருந்துகள் மிக மோசமான நிலையிலேயே உள்ளது. கும்பகோணம் கோட்டத்தில் மற்ற நகர்ப்பகுதி பணிமனைகளில் புதிதாக வரும் பேருந்துகள்  இயக்கப்பட்டு, அந்த பேருந்துகள் பழுதடையும் நிலையிலேயே பேராவூரணி பணிமனைக்கு அனுப்பப்படுவது கடந்த பல வருடங்களாக வாடிக்கையாக உள்ளது.இதன் காரணமாக இங்கிருந்து இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் மோசமான நுலையிலேயே உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசுப்பேருந்து பேராவூரணி நகருக்குள் செல்லும்போது அச்சுமுறிந்து நடுரோட்டில் நின்று விட்டது. மோசமான சாலை, காயலான்கடை செல்லும் நிலையில் உள்ள பேருந்து என்பதால் அச்சுமுறிந்தது. ஆனால் போக்குவரத்து நிர்வாகம் ஓட்டுநர், நடத்துனர், மெக்கானிக்கை  இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே பேருந்து பராமரிப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, போதிய டயர்களை அரசு  போக்குவரத்து கழக பணிமனைகளுக்கு வழங்கி, பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Print Friendly, PDF & Email